நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளி மாநில போலீசார் வருகை

1,540 போலீசார், ஊர்க்காவல் படையினர் சேலம் வருகை

Update: 2024-04-18 06:30 GMT

போலீசார் வருகை

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 1540 பேர் வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வந்தனர். அதில் ஆந்திராவில் இருந்து 450 போலீசார், 650 ஊர்க்காவல் படையினர், கேரளாவில் இருந்து 100 போலீசார் மற்றும் கர்நாடகம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 340 மத்திய பாதுகாப்பு படையினர் என மொத்தம் 1,540 பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிறப்பு ரெயில்கள் மூலம் சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் மாவட்டத்தில் எந்ததெந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விரைவில் பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News