மேல்நிலை நீர் தேக்க தொட்டி பூமி பூஜை

தென்காசி மாவட்டம்,சிங்கிலிபட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

Update: 2024-02-25 09:09 GMT
சிங்கிலிபட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பூமி பூஜை நடைபெற்றது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டியில் 27 லட்சம் மதிப்பீட்டில் அமைய இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பூமி பூஜை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் ஒன்றிய தலைவர் சுப்பம்மாள், துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ், கடையநல்லூர் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், மூப்பன், ஹபீபுர் ரஹ்மான், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நகர் மன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News