திருப்பூரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பெண் உரிமையாளர் கைது!

திருப்பூர் பல்லடம் ரோட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய மசாஜ் சென்டர் பெண் உரிமையாளரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-22 14:35 GMT
பைல் படம்
திருப்பூரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய மசாஜ் சென்டர் பெண் உரிமையாளர் கைது! திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று அந்த மசாஜ் சென்டரில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.இதில் அங்கு 2 அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. மேலும் 2 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்திய உரிமையாளரான ராக்கியாபாளத்தை சேர்ந்த ராஜேஸ்வரியை வயது (40) தெற்கு போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News