பொதிகை சுற்றுலா படகு இயக்கம்

கன்னியாகுமரியில் பொதிகை சுற்றுலா படகு இயங்க துவங்கியது.

Update: 2024-05-02 02:10 GMT
கன்னியாகுமரியில் பொதிகை சுற்றுலா படகு பராமரிப்பு பணிக்கு பின் இன்று முதல் மீண்டும் இயங்க துவங்கியது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பொதிகை படகை ரூ. 3 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து அந்த படகு சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.        அங்கு படகு பராமரிப்பு பணி முடிவடைந்ததை தொடர்ந்து கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டு, கன்னியாகுமரி படகு துறைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தற்போதைய  கோடை விடு முறை சீசனையொட்டி இன்று முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல அந்த படகு பயன்படுத்தப்பட்டது.
Tags:    

Similar News