தாயுடன் கள்ளக்காதல் - விவசாயியை வெட்டி கொன்ற மகன் கைது

பாலக்கோடு அருகே விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வாலிபர் கைது. தாயின் கள்ள காதலை கைவிடாததால் கொலை செய்ததாக வாக்கு மூலம்

Update: 2023-12-03 05:43 GMT

சதிஷ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த பெரியானுர்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன் (50).  இவரது மனைவி வசந்தா (40). இவர்களுக்கு வினோத்குமார் (25) வினோதினி (23) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாகராஜன் நேற்று முன்தினம் காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரை தேடி அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்க்கு சென்றனர். தோட்டத்திற்க்கு செல்லும் வழியில் நாகராஜன் தலை, கழுத்து பகுதியில் வெட்டுப்பட்டு,இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் மற்றும் தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வந்தனர். 

சம்பவ இடத்திற்க்கு வந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் கொலை சம்பவம் குறித்து விரைந்து விசாரிக்க பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் புதுப்பேட்டையை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் சதிஷ் (19) என்பவரை கைது செய்து விசாரித்ததில் தான் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

போலீசார் விசாரணையில் அவர் கூறியதாவது தன்னுடைய தாய் ரத்னாவுடன் (45)  நாகராஜன் கள்ள தொடர்பு வைத்திருந்தாகவும், கள்ள காதலை கைவிடும்படி பலமுறை கூறியும் கைவிடாததால், ஆத்திரமடைந்து நாகராஜனை கொலை செய்ய திட்டமிட்டு நாகராஜனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்ததாகவும், வழக்கமாக தினமும் புதுப்பேட்டையில் உள்ள தோட்டத்திற்க்கு வருவதை உறுதி செய்த பின் நேற்று முன்தினம் காலை பட்டா கத்தியுடன் காத்திருந்ததாகவும், எதிர்பார்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த நாகராஜனை வெட்ட முயன்ற போது சுதாரித்து கொண்டு மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓட முயன்ற போது துரத்தி சென்று தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து பஞ்சப்பள்ளி போலீசார் கொலைக்கு பயன்படுத்திய பட்டாகத்தியை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர். தாயின் கள்ள காதலை கைவிடாத விவசாயியை மகன்  வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News