தங்க மாரியம்மன் கோவிலில் பால்குடம் வீதி உலா

தங்க மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பால்குடம் வீதி உலா நடைபெற்றது

Update: 2024-03-28 06:44 GMT
தங்க மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு பால்குடம் வீதி உலா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆதிசங்கரவிநாயகர் கோவில் தெருவில் அருள்மிகு தங்க மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது மிகவும் பழமையான இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கோவில் கொடை விழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஆதிசங்கர விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குடம் வீதி உலா ரத வீதி வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News