பஞ்ச மூர்த்தி புறப்பாடு தீர்த்தவாரி

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு தீர்த்தவாரி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-24 08:37 GMT
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறையில் உள்ள ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் நடைபெற்று வரும் சித்ரா பௌர்ணமி பிரம்மோத்சவ விழாவை யொட்டி செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி விழா நடைபெற்றது.விழாவை யொட்டி அலங்கரிக்கப்பட்ட தனித்தனி சப்பரங்களில் விநாயகர்,வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், பாலைவனநாதர்,பார்வதி அம்மன், தவளவெண்ணகை அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் கோயிலிலிருந்து திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றுக்கு எழுந்தருளினர்.அங்கு பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீர்த்த வாரி நடைபெற்றது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பஞ்ச மூர்த்திகள் கோயிலுக்கு சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோவில் செயல் அலுவலர் விக்னேஷ் ஆய்வாளர் லட்சுமி கோவில் எழுத்தர் சங்கரமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News