நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

திருநெல்வேலியில் நரிக்குறவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் உணவு வழங்கினார்.

Update: 2024-05-21 07:57 GMT

திருநெல்வேலியில் நரிக்குறவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் உணவு வழங்கினார்.


திருநெல்வேலி மாவட்டம் பேட்டை நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தற்போது கோடை மழை பெய்வதை தொடர்ந்து வாழ்வாதாரம் இன்றி உணவுக்கு தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதனை அறிந்த ‌புதுக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் ஏற்பாட்டில் இன்று (மே 21) காலை நரிக்குறவ மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News