பண்ருட்டி: 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

பண்ருட்டி: 2,000 லிட்டர் மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்கிற்கு சீல் வைப்பு

Update: 2024-07-04 09:50 GMT

மெத்தனால்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் 2000 லிட்டர் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் பெட்ரோல் பங்க்கில் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து சோதனை நடத்தினர். இதையடுத்து நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.
Tags:    

Similar News