பாப்பம்பட்டி மாத்து கண்மாயில் மீன்பிடி திருவிழா!
பருவமழை நன்றாக பெய்ய வேண்டியும், ஜாதி,மத பேதமின்றி கிராமமக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் மீன்பிடித்திரு விழா நடந்தது.
Update: 2024-04-01 04:40 GMT
திருமயம் அருகே உள்ள பாப்பாம்பட்டி மாத்து கண்மாயில் கோடைக்காலத்தை முன்னிட்டும், பருவமழை நன்றாக பெய்ய வேண்டியும், ஜாதி,மத பேதமின்றி கிராமமக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் மீன்பிடித்திரு விழா நடந்தது. கிராமத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான கிராமமக்கள் மீன்பிடி உபகரணங்களான பரி,கச்சா, வலை ஆகியவற்றை கொண்டு ஆர்வமுடன் மீன்பிடித்தனர். வலையில் ஜிலேபி, கெண்டை அயிரை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் அதிக அளவில் கிடைத்தன. அவற்றை கிராமமக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.