நாடாளுமன்ற தேர்தல்: சமக தலைவர் சரத்குமார் தகவல்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-01 17:19 GMT
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 

செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகியின் திருமண விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து இஸ்லாமிய தம்பதியினரின் குழந்தைக்கு முகம்மது அனஸ் என பெயர் வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் பிப்ரவரி 2-ஆம் தேதி உயர் மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாகவும், அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தெரிவிக்கப்படும்,

தமிழகத்தில் 234- சட்டமன்ற தொகுதியும், 39-பாராளுமன்ற தொகுதியும் சாதகமாக உள்ளது. கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது,

எல்லோரையும் அரசியலுக்கு வரவேற்கிறோம், நல்லது செய்ய யார் வந்தாலும் வரவேற்போம் என தெரிவித்தார். ரஜினி மீதான சங்கி சர்ச்சை குறித்து கருத்து சொல்ல நேரமில்லை, நீங்களே ஆய்வு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News