பாராளுமன்ற நிகழ்வு: ஈஸ்வரன் எம்எல்ஏ கருத்து

பாராளுமன்றத்தில் நடந்துள்ள நிகழ்வு வருத்தத்திற்கு உரியது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-14 09:23 GMT

சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோட்டில் கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் திட்டத்தை கைவிடக்கோரி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் பேரணி நடத்தினர்.இதில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்றத்தில் நடந்துள்ள நிகழ்வு வருத்தத்திற்கு உரியது என்றும் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தொய்வை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு அல்லது அதிகாரிகளிடம் தரப்பில் தவறு உள்ளதாகவும் இதனை ஒன்றிய அரசு களைய வேண்டும். பிரதமர் உள்துறை அமைச்சரும் இச்சம்பவம் குறித்து அறிக்கை அளித்திருக்கவேண்டும் மறுபடியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான உணர்வை வழங்கியிருக்க வேண்டும்.

நேற்று நடந்ததில் அரசியல் செய்ய கூடிய நிகழ்வு அல்ல.இதனை நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்துள்ளது என்றுதான் பார்க்கவேண்டும் என ஈஸ்வரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News