சேலம் மத்திய சிறையில் 16 கைதிகளுக்கு பரோல்

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சேலம் மத்திய சிறையில் 16 நன்னடத்தை கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-14 08:26 GMT

சேலம் மத்திய சிறை 

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தண்டனை கைதிகளுக்கு மட்டும் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் பொங்கல் பண்டிகையை அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கு ஆண்டுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தண்டனை கைதிகள் 16 பேருக்கு நேற்று பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற கைதிகளை அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்து சென்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து தண்டனை கைதிகள் மீண்டும் மத்திய சிறைக்கு திரும்புவார்கள் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News