பகுதிநேர நியாய விலை கடை திறப்பு

நாசன் கொட்டாய் பகுதியில் புதியதாக நியாய விலை கடைக்கான கட்டிடம் கட்டப்பட்டு முடிவடைந்த நிலையில் இன்று அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் திறந்து வைத்தார்.

Update: 2024-02-09 07:23 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகர் நியாயவிலை கடையிலிருந்து தனியாக நாசன்கொட்டாய் பகுதிக்கு புதிய நியாய விலை கடை வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நாசன் கொட்டாய் பகுதியில் புதியதாக நியாய விலை கடைக்கான கட்டிடம் கட்டப்பட்டு முடிவடைந்த நிலையில் இன்று புதிய பகுதி நேர நியாய விலைக் கடையினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் நுகர் பொருள் வாணிப கழக அலுவலர்கள் மற்றும் நியாய விலை கடை ஊழியர்கள் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் இனிப்புகள் வழங்கினார்.
Tags:    

Similar News