மாமல்லபுரம் சாலையில் வரைந்து வைத்த கட்சி சின்னங்கள்

மாமல்லபுரம் சாலையில் வரைந்து வைத்த கட்சி சின்னங்கள்.

Update: 2024-04-23 16:16 GMT

சாலையில் வரைந்த கட்சி சின்னங்கள்

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்னமாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனவே, சிற்ப பகுதிகளை துாய்மையாக பராமரிக்க வேண்டியது அவசியம். இப்பகுதி அரசியல் கட்சியினர், சுற்றுலா சிறப்பில் சிறிதும் அக்கறையின்றி, இங்கு பதாகை வைத்தும், சுவரொட்டி ஒட்டியும் அலங்கோலப்படுத்துகின்றனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., நாம் தமிழர் ஆகிய கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டினர். ஓட்டுப்பதிவின் போதும், வாக்காளர்களை கவர, சிற்ப பகுதிகள் சாலைகளில் கட்சி சின்னங்களை பெரிதாக வரைந்து வைத்தனர். இதனை கண்டு, சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கின்றனர்.
Tags:    

Similar News