பயணிகள் நிழற்குடை திறப்பு

திருக்குவளையில் நடைபெற்ற பயணிகள் நிழல்குடைதிறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாகை பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-21 05:58 GMT

பயணியர் நிழற்குடை திறப்பு 

நாகை மாவட்டம், திருக்குவளை கடைத்தெருவில் பேருந்து நிறுத்தத்தில் நாகை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் செலவில் பயணிகள் நிழல்குடை (செட்) அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணிகள் நிழல்குடைதிறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கௌசல்யா இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வைத்தனர் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வம் வரவேற்றார்.

புதிய நிழல்குடையை  நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திறந்து வைத்தார். விழாவில் கீழையூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மலர்வண்ணன் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், கீழையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பாத்திஆரோக்கியமேரி, வெற்றிச் செல்வன் , ஒன்றிய குழு உறுப்பினர் சுதாஅருணகிரி   உள்ளிட்ட பலா கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News