பயணிகள் ஆட்டோ மோதி விபத்து : நான்கு பேர் படுகாயம்.

நேரு நகரில் திடீரென டூ வீலரை திருப்பியதால், பின்னால் வந்த பயணிகள் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2024-06-05 16:15 GMT

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தொக்குப்பட்டி அருகே உள்ள கருங்கல் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் வயது 43. இவர் அரவக்குறிச்சி பகுதியில் பயணிகள் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். ஜூன் 2-ம் தேதி இரவு 8 மணி அளவில், கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில், பயணிகளை ஏற்றிக்கொண்டு ரமேஷ்குமார் சென்று கொண்டிருந்தார்.

இவரது ஆட்டோ நேரு நகர் பகுதியில் உள்ள பாலமுருகன் பைப் கம்பெனி அருகே சென்றபோது, அரவக்குறிச்சி தாலுக்கா, புஞ்சைகாளகுறிச்சி அருகே உள்ள கஞ்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் வயது 31 என்பவர் டூவீலரில், பயணிகள் ஆட்டோவை முந்தி சென்று,திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், டூவீலரை வலது புறம் திருப்பியதால், பின்னால் ரமேஷ் குமார் ஓட்டி வந்த பயணிகள் ஆட்டோ டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் குமார், மற்றும் பயணிகள் கருங்கல் புளியப்பட்டியை சேர்ந்த பூபதி, கணேசன், டூ வீலரை ஓட்டிச் சென்ற தர்மராஜ் ஆகிய 4- பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் ரமேஷ் குமார் அளித்த புகார் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை மஜாக்கிரதையாகவும், சாலை விதிகளை பின்பற்றாமல் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.

Tags:    

Similar News