போலி முகவரியில் பாஸ்போர்ட் - ஒருவர் கைது

விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2024-03-21 12:32 GMT

கைது

திருச்சியிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குட்யாண்டிசாமி (வயது 39) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்த போது அவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு ப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News