அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடகு கடை ஊழியர் உயிரிழப்பு

இராஜாக்கமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடகு கடை ஊழியர் உயிரிழப்பு

Update: 2024-07-04 07:34 GMT

காவல்துறை விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு அடகு கடையில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருபவர் குமார் (44). இவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர்  பகுதியை சேர்ந்தவர். இந்த நிலையில் சம்பவ தினம் குமார் தனது பைக்கில் வேலை விஷயமாக வெள்ளமோடி  பகுதியில் இருந்து இராஜாக்கமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஸ்ரீ கிருஷ்ணாபுரம் சந்திப்பில் வைத்து அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று குமார் ஓட்டிய பைக் என் பின்பக்கத்தில் மோதியது. இதார் குமாரின் பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது. இந்த விபத்தில் குமாரின் பின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர்  முட்டத்தில் உள்ள  தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.        ஆனால் சிகிச்சை பலனின்றி  குமார் உயிரிழந்தார். விபத்து நடந்த இடம் ராஜாகமங்கலம்  பகுதி என்பதால்  ராஜாகமங்கலம் போலீசார் குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறிதது விசாரணை நடத்தி வரகின்றனர்.
Tags:    

Similar News