வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல், திக சார்பில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2024-01-17 12:10 GMT

வள்ளுவர் தினம் 

அனைத்து பொதுமக்களும் உலகப் பொதுமறையாக ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையிலான கருத்துக்களை ஒண்ணே முக்கால் அடியில் தந்த திருவள்ளுவர் பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு நேற்று விடுமுறை அறிவித்தது.

இந்நிலையில், திண்டுக்கல்லில் பொய்யாபுலவன் திருவள்ளுவர் சிலைக்கு திக சார்பில் திக தலைமைகழக அமைப்பாளர் வீரபாண்டியன், திக மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல பல்வேறு கட்சி அமைப்புகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாணவ மாணவிகளும் திருக்குறளில் பாடி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News