மேட்டூரில் விஜயகாந்த் மறைவிற்கு அமைதி பேரணி

சேலம் மாவட்டம், மேட்டூரில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவிற்கு நடைபெற்ற அமைதி பேரணியில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

Update: 2024-01-29 06:10 GMT

பேரணி

மேட்டூரில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார்.மேட்டூர் நகர செயலாளர் சிவகுமார் வரவேற்பு உரையாற்றினார்.பேரணியானது மின் பணிமனை சந்திப்பில் தொடங்கி பேருந்து நிலையம் மற்றும் சதுரங்காடி வழியாக சென்று சின்ன பார்க் வந்தடைந்தது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தேமுதிக நிர்வாகிகள் பழனிசாமி, அவைத்தலைவர் பாலசுப்பிரமணியம், நகர துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் சிவா தைலாம்பாள், நகர துணை செயலாளர் கதிர்வேல் ,மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், மாவட்ட பிரதி மணிகண்டன், பழனிசாமி, சுந்தர்ராஜன், தியாகராஜன், ராணி மற்றும் திமுக,விசிக, பாஜக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News