அதிகம் பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்

மதுராந்தகத்தில் அதிகம் பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு தலா ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-06-25 13:07 GMT

மதுராந்தகத்தில் அதிகம் பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு தலா ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே சித்தாமூரிலிருந்து சோத்துப்பாக்கம் வழியாக தினம்தோறும் தனியார் கல் மற்றும் மணல் குவாரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மண் கல் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிறது. அதனால் அந்த சாலைப் பகுதியில் உள்ள முகுந்தகிரி, கொளம்பாக்கம், மழுவங்கரணை , பொறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கல் மற்றும் மண் குவாரிகளில் இருந்து வரும் லாரியால் தொடர்ந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன அதன் அடிப்படையில் இன்று மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் அதிக பாரத்துடன் மண் மற்றும் கல் ஏற்றி வந்த 25-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு தல ரூபாய் 60 ஆயிரம் வீதம் மொத்தமாக 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News