ஓய்வூதியர் குறைதீர்வுநாள் கூட்டம்

ஓய்வூதியர் குறைதீர்வுநாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-17 10:15 GMT

ஓய்வூதியர் குறைதீர்வுநாள் கூட்டம்

ஓய்வூதியர் குறைதீர்வுநாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகள் தொடர்பாக ஓய்வூதியர்களிடமிருந்தும், ஓய்வூதியர் சங்கங்களிடமிருந்தும் பெறப்பட்ட 20 மனுக்களில் 12 மனுக்கள் தீர்வு செய்யப்பட்டது. மீதமுள்ள 08 மனுக்கள் மார்ச் 2024-ஆம் மாதத்திற்குள் தீரவு காணவும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், ஓய்வூதியம் தொடர்பாக பெறப்பட்ட மனு தொடர்புடைய துறைக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டக் கருவூல அலுவலர் திரு.தி.சந்தானகிருஷ்ணன், சென்னை, ஓய்வூதிய இயக்கக கணக்கு அலுவலர் திரு.வெ.ராஜசேகர், முதுநிலை கண்காணிப்பாளர் திரு.பி.ரிச்சர்ட் பேட்ரிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திரு.எம்.மணிக்கண்ணன் மற்றும் பல்வேறு ஓய்வூதிய சங்கத்தலைவர்கள், அனைத்து துறை அலுவலர்கள், யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News