சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் பொதுமக்கள் அச்சம்

திண்டிவனம் பகுதியில் சாலை ஓரம் கொட்டப்படும் குப்பையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2024-06-07 07:43 GMT

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் 

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நுண் உரமாக்கும் மையம், சலவாதி சுடுகாடு பகுதி, அவரப்பாக்கம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் திண்டிவனம் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளில் இருந்தும், தினமும் சேகரமாகும் குப்பைகைளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த குப்பை யார்டில் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்திற்காக மைக்ரோ கம்போசிங் மையம் கட்டம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் நகர பகுதிகளில் நகராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லை. இதனால் நகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் யார்டிற்கு கொண்டு போகாமல், திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரை, புதிய பஸ் நிலையம் வர உள்ள இடத்திற்கு அருகே இருக்கும் ஏரி, கர்ணாவூர் சுடுகாடு பகுதி, திண்டிவனம் - மயிலம் ரோட்டில் உள்ள புறவழிச்சாலையின் இரண்டு பக்கம் என கண்ட இடங்களில் குப்பைகளை மலை போல் கொட்டி வருகின்றனர். இதனால் நோய் தொற்று வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News