தேயிலை தோட்டத்தில் உலா வரும் காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம்.

Update: 2023-11-15 05:39 GMT

காட்டெருமை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் அதிக அளவில் காட்டெருமைகள் உலா வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், தேயிலைத் தோட்டத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதி மக்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் அட்டவாலா பாரதி நகர் பகுதியில் அதிகாலை காட்டெருமைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டன.மேலும் தேயிலை தோட்ட வழியாக செல்லும் பொதுமக்களை காட்டெருமைகள் தாக்கும் விதமாக அச்சுறுத்தின. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். எனவே தேயிலை தோட்டங்களில் உலாவரும்  காட்டெருமைகளை அடர்ந்தவனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதி நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News