நெல்லையில் மனு அளிக்க குவியும் மக்கள்

திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மக்கள் பாளையங்கோட்டையில் நடந்த முகாமில் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Update: 2024-01-07 04:45 GMT
மனு அளிக்க குவிந்த மக்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18ஆம் தேதி பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்ததால் இருப்பிட சான்று,கல்வி சான்று உள்ளிட்டவைகளை மக்கள் இழந்தனர். இந்த நிலையில் இன்று பாளையங்கோட்டை வஉசி மைதான எதிரே உள்ள பிபிஎல் மண்டபத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை திரும்ப பெறவும் மனுக்கள் அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News