போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையாளர் சுபகுமார் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

Update: 2024-06-26 13:57 GMT

பேரணி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ அரவிந்தர் மீரா கல்வி குழுமத்தினர் சார்பாக பேரணி நடைபெற்றது இதில் மதுரை திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையாளர் சுபகுமார் டாக்டர் V.M. விஜய் சரவணன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்கினை பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினர்.

பின்னர் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சி பள்ளி தலைவர் சந்திரன் தலைமையில் பள்ளி இயக்குனர்   Er.M.C. அபிலாஷ் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் கவிதா பள்ளி முதல்வர்களும் கலந்து கொண்டனர்.பேரணி நேருநகர் பள்ளி வளாகத்தில் இருந்து காளவாசல் வரை நடைபெற்றது.

Tags:    

Similar News