சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம்,அகலம் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-06 16:09 GMT

சாலையை சீரமைக்க கோரிக்கை 

ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி அடுத்த அகவலம் கிராமத்திலிருந்து அகவலம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும் 2 கிமீ தூர சாலை சில ஆண்டுக்கு முன்னர் போடப்பட்டது. அந்த வழியாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், பள்ளி வாகனம் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

இதன் வழியாகத்தான் மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது.சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

அதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே விபத்தை தடுக்க புதிய சாலை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News