செங்கல்பட்டு அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளார்.

Update: 2024-04-16 13:53 GMT
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் ஊராட்சியில் அனுமந்தபுரம், தர்காஸ், தாசரிகுப்பம், சந்தகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழில். இக்கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் மற்றும் புடலங்காய், கத்தரிக்காய்,

மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மின்கம்பிகள் செல்கின்றன.

இந்த மின் கம்பிகள் பல இடங்களில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதன் காரணமாக, வயலுக்கு செல்லும் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

Tags:    

Similar News