அரசு மதுபான கடையில் மது பாட்டில் இறக்க விடாமல் திருப்பி அனுப்பிய மக்கள் !!

அரசு மதுபான கடையை காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில் நேற்று மதுபாட்டில்கள் இறக்க லாரியை இறக்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள்.

Update: 2024-05-28 11:42 GMT

மதுபான கடை

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அரசு மதுபான கடை ராஜேந்திரன் என்பவரின் விவசாய தோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கடந்த 9 வருடங்களாக மதுபான கடை நடந்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு மதுபான கடையை காலி செய்யுமாறு இடத்தின் உரிமையாளர் மனு அளித்துள்ளனர். ஆனால் இரண்டு வருடம் ஆகியும் மதுபான கடையை காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில் நேற்று மதுபாட்டில்கள் இறக்க லாரியை இறக்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள் உடனடியாக கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்து வைத்தார்.
Tags:    

Similar News