மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 பேர் கைது

தக்கலை மற்றும் மூலச்சல் பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-18 03:10 GMT

  தக்கலை மற்றும் மூலச்சல் பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பொறுப்பு எஸ்.ஐ. சாமுவேல் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது போதையில் வாகனம் ஓட்டி வந்த விஜயகுமார், ஜெகன், சுரேஷ், கணபதி ஆகியோர் பிடிபட் டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அனுமதியின்றி மது மற்றும் கப் வைத் திருந்த மூலச்சல் கனகராஜ் என்பவரை கைது செய்தனர்.கொற்றிக்கோடு போலீசார் முட்டைக்காடு பகுதியில் வாகனத் தணிக்கை செய்த போது போதையில் வாகனம் ஓட்டி வந்த அட்வென்ட், அசின், விக்னேஷ் ஆகியோர் சிக்கினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News