மக்கள் குறைதீர் கூட்டம் 463 மனுக்கள் குவிந்தன!

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்தது.

Update: 2024-07-09 09:13 GMT

மக்கள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை,வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 ஆயிரம் மதிப்பீட் டில் உபகரணங்கள் கலெக்டர் வழங்கினார். டிஆர்ஓ(பொ)ரம்யாதேவி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் உலகநாதன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News