மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
Update: 2023-12-12 06:53 GMT
மக்கள் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 373 மனுக்கள் பெறப்பட்டது. . அதேநேரம், ஒருமாதத்திற்கும் மேலாக அதிக எண்ணிக்கையிலான மனுக்களை நிலுவையில் வைத்துள்ள அலுவலர்கள், குறைந்த எண்ணிக்கையிலான மனுக்களுக்கு மட்டும் நடவடிக்கை எடுத்துள்ள அலுவலர்கள் இனிவரும் நாட்களிலும் இதுபோல் செயல்பட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரித்தார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், துணை காவல் கண்காணிப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.