காவல் அதிகாரிகள் முன்னிலையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

கோவையில் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-19 11:58 GMT

கோவை:பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீதான விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி மேற்பார்வையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்றது.

மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனர்.குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்றம் மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 81 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் ஒரு மனு மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டு 59 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும் 17 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்து தீர்வு காணப்பட்டது. மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News