விராலிமலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மக்கள் கூட்டம்!

விராலிமலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மக்கள் கூட்டம் நடந்தது.

Update: 2024-01-23 06:26 GMT


பைல் படம்


விராலிமலையில் சுபமுகூர்த்த நாளான திங்கட்கிழமை பத்திரப்பதிவு அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்கள் தாங்கள் விருப்பநாளில், விரும்பும் நேரத்தில் பதிவு மேற்கொள்ளும் வகையில் ஆன்லைன் டோக்கன் வசதியை பதிவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, முகூர்த்த நாள்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும், பத்திரப்பதிவுகள் கூடுதலாக நடைபெற்று வருகின்றன. விராலிமலை சார்- பதிவாளர் அலுவலகத்தில் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதில் திங்கட்கிழமை 150 டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பத்திரப்பதிவை எளிதாக மேற்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்...
Tags:    

Similar News