லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது

கன்னங்குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-20 09:29 GMT

பைல் படம்

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சிட்டுக்கண்ணன் (வயது58), ராஜசேகர் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரையும் கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

Similar News