பெரியகுளம் : அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
பெரியகுளத்தில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய போக்குவரத்து கழக கிளை மேலாளர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-07-03 08:25 GMT
காவல் நிலையம்
தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியை சேர்ந்த சீனிவாசன் இவர் பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக கிளையில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணி முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும்போது கிளை மேலாளர் மணிவண்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சீனிவாசனை ஊழியர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார் இது குறித்து புகாரில் மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு பேர் மீது பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்