ஆற்றில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-06-06 07:18 GMT

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.


குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூன்று வாலிபர்கள் சப்பாத் கடவில் குளிக்க இரண்டு பைக்குகளில் வந்தனர்.அப்பொழுது லேசான மழை பெய்து கொண்டி ருந்தது. படித்துறையில் வைத்து ஒருவர் துணிகள் துவைத்து கொண்டிருந்தார். மற்ற இருவரும் அவருக்கு உதவி செய்து உள்ளனர்.இதில் ஒருவர் குளிப்பதற்கு ஆற்றில் இறங்கி உள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக அவர் படித்துறை கடந்து சப்பாத் கீழ்பகுதியில் உள்ள மடையில் இழுத்துச் செல்லப்பட்டு மறுபுறம் வந்து உள்ளார்.

அப்பொழுது அவருடன் வந்தவர்கள் மற்றும் அங்கு நின்ற சிலர் வெள்ளத்தில் சிக்கியவரை மீட் பதற்காக கயிறு போட்டு உள்ளனர். ஆனால் அவரால் கயிற்றை பிடிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் அவர்தண்ணீரில் மூழ்கி உள்ளார். இந்நிலையில் உடன் வந்த இருவரும் பைக்கில் திரும்பி சென்று உள்ளனர். இதை அருகில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கவனித்து உள்ளனர்.

இதை அடுத்து உடனடியாக குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர் கள் ஆற்றில் இறங்கி தேடினர். மாலை வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News