நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

நெல்லையில் நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு நிலவியது.

Update: 2024-03-22 07:04 GMT

 தீக்குளிக்க முயன்ற நபர் 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான இடத்தில் வேறொரு நபர் ஆக்கிரமித்து வீடு கட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று (மார்ச் 22) மாரியப்பன் நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News