திருப்பூரில் வளர்ப்பு நாய் செய்த வினை: சண்டைக்காட்சி வீடியோ வைரல்

திருப்பூரில் வளர்ப்பு நாயின் காரணமாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட சண்டைக்காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2024-06-21 15:16 GMT

அடித்துக் கொள்ளும் இருதரப்பினர்

திருப்பூர் பாளையக்காடு வடக்கு ஆர் எஸ் புரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் பனியன்  நிறுவனங்கள் உள்ளன. அதே பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனம் முன்பாக வளர்ப்பு நாய் ஒன்று அடிக்கடி அசுத்தம் செய்து வைத்து வந்துள்ளது. இது தொடர்பாக நிறுவன உரிமையாளர் வளர்ப்பு நாயின் உரிமையாளரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து வளர்ப்பு நாய் அசுத்தம் செய்து வந்துள்ளது. இது குறித்து  அவரது வீட்டிற்கு சென்று முறையிட்டபோது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி வளர்ப்பு நாயின் உரிமையாளர்களான  தந்தை ,

மகன் இருவரும் சேர்ந்து பனியன் நிறுவன உரிமையாளரை தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருதரப்பையும் சமரசம் செய்து சண்டையை தடுத்து நிறுத்தினர்.  இந்த சண்டை காட்சி தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News