ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை நிறுத்தி வைக்க மனு

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை நிறுத்தி வைக்க மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

Update: 2023-12-13 14:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக மின்வாரியத்தில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால், மின் நுகர்வோருக்கு மிகுந்த பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழக முழுவதும் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தளவாய் பாளையம் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில், உதவி மின் பொறியாளரை சந்தித்து, இன்று மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய குழு, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கையொப்பம் செய்த படிவங்களையும் இணைத்து, மின்வாரிய அதிகாரியிடம் அளித்து, தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வலியுறுத்தினர்.

Tags:    

Similar News