பட்டா, வீடு வழங்கக்கோரி இருளர் இன மக்கள் மனு

திம்மலை கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடி மக்கள் தங்களுக்கு வீடூ , நிலம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-02-21 06:33 GMT

பைல் படம் 

கள்ளக்குறிச்சி அடுத்த திம்மலை கிராமத்தில் வசிக்கும் இருளர் சமுதாய மக்கள் சிலர் கோரிக்கை மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திம்மலை கிராமத்தில் வசிக்கும் எங்களுக்கு வீடு, நிலம் இல்லை. ஏரிக்கரை அருகே வசிக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருளர் சமுதாய மக்கள் வீடு கட்ட இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்களுக்கு அரசு இடம் மற்றும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News