வீரபாண்டி அறநிலைத்துறை அலுவலரிடம் தற்காலிக கடை அமைப்பவர்கள் கோரிக்கை மனு

தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு தற்காலிக கடை அமைக்க அறநிலைத்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-05-04 01:57 GMT

கோரிக்கை மனு அளிக்க வந்தவர்கள்

தேனி வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் மே 7ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலையில் தற்காலிக கடை அமைப்பதற்கு 50க்கும் மேற்பட்டோர் அறநிலைத்துறையினரிடம் ரசீது பெற்ற நிலையில் தற்போது கடை அமைப்பதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News