தான செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்ய கலெக்டர் அலுவலகத்தில் தாய் மனு

Update: 2023-12-12 09:11 GMT

ஆட்சியர் அலுவலகம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குளிக்கரை பகுதியைச் சேர்ந்த கவிதா என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் எனது கணவர் ராஜேந்திரன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான துர்காதேவியின் பராமரிப்பில் இருந்து வந்தேன். எனது மகள் என்னை கவனித்துக் கொள்வார் என்பதற்காக எனக்கு சொந்தமான இடத்தை துர்காதேவிக்கு தான செட்டில்மெண்ட் மூலம் எழுதிக் கொடுத்தேன். ஆனால் சொத்து எழுதிக் கொடுத்த பிறகு துர்காதேவி சரிவர என்னை கவனிக்கவில்லை. எனவே எனது மகளுக்கு அளித்த தான செட்டில்மெண்ட் இடத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார்.
Tags:    

Similar News