கடத்தல் சிகரெட்டுகளை தடை செய்யக்கோரி மனு

திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு கடத்தல் சிகரெட்டுகளை தடை செய்யக்கோரி மனு அளித்தனர்.

Update: 2024-06-26 16:03 GMT

மனு அளித்த போது

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட சிகரெட் மொத்த வியாபாரிகள் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் தெரிவித்து இருப்பதாவது,

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கடத்தி வந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சிகரெட் உபயோகிப்பவர்களுக்கு உடல் நல தீங்கு ஏற்படும் மேலும் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டு வருவதால் மேலான சமூகம் ஐயா அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக கடத்தி வந்து வெளிநாடு சிகப்புகளை விற்பனை செய்வதை தடை செய்தும் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம், என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News