பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கலெக்டரிடம் கோரிக்கை மனு !
நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அன்று (29.03.2024) வருகை தருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனு அளித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-20 06:05 GMT
பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு,தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அன்று (29.03.2024) வருகை தருவதை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மாபெரும் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி மனு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின் போது, செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்ட கழக செயலார்கள், காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர்கள், கழக, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து நிலை சார்பு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.