காதில் பூ சுற்றி ஆட்சியரிடம் மனு

கோவையில் காதில் பூ சுற்றி ஆட்சியரிடம் மனு அளித்த இயக்கத்தினர்.

Update: 2023-10-30 06:49 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் கபரஸ்தானுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்தோடு கடைகள் வாடகைக்கு விடுவதை தடுக்க கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுற்றிக்கொண்டு பூ பழ தட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.இது குறித்து இந்த இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ள மனுவில் சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்டி உள்ளதாகவும் தற்போது அந்த இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுகின்ற பணியை செய்து வருவதாகவும் இது சட்டத்திற்கு புறமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வெங்கட்ராமன் என்பவர்களுக்கு வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட இலவச பட்டா நிலத்தையும் வாங்கி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கடைகளை கட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளிவாசல் அருகில் உள்ள இடம் கருவூலக் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் செல்வாக்கை வைத்து அதனை ரத்து செய்து இருப்பதாகவும் இறந்தவர்களைப் புதைப்பதற்காக வழங்கப்பட்ட இடத்தில் வணிக நோக்கத்திற்காக கடைகளை வாடகைக்கு விட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News