பொதுப்பாதை,குளத்தை மீட்டுத் தருமாறு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து பொதுப்பாதை மற்றும் குளத்தை மீட்டுத் தருமாறு கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-12-08 08:17 GMT

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து பொதுப்பாதை மற்றும் குளத்தை மீட்டுத் தருமாறு கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தருவைக்குளம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், ஓட்டப்பிடாரம் வட்டம், தருவைக்குளம் கிராமத்தில் உள்ள பொதுப்பாதையை, தனிநபர் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி குறுக்கே பள்ளம் தோண்டி இடையூறு ஏற்படுத்தி வருகிறார்.

இதுபோலவே, மக்கள் பயன்பாட்டிற்குள்ள குளத்தில், பாதி குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தனக்கான தண்ணீரை குளத்திலிருந்து மின்மோட்டார் மூலம் திருட்டுத்தனமாக எடுப்பதுடன், தனது உப்பளத்தில் உள்ள உப்பு கலந்த கழிவுநீரை வேண்டுமென்றே பொதுகுளத்தில் கலக்கச் செய்து, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் குளத்துநீரை பயன்படுத்த முடியாதபடியும், பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடியும் செய்து, மீதிகுளத்தையும் தானே ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் நடந்து வருகிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News