சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம்.

சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-11-01 10:17 GMT

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிறப்பு பென்ஷன் 6750 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பென்சனாக 6750 வழங்கிட வேண்டும் , அரசு துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் , காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News