வாகனம் மோதி பன்றிகள் பலி

ஆம்பூர் அருகே சாலையை கடக்க முயன்ற பன்றிகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 பன்றிகள் உயிரிழந்தன.

Update: 2024-05-19 03:33 GMT

உயிரிழந்த பன்றிகள்

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் பன்றிகள் வளர்த்து வருகின்றார். இந்நிலையில் பன்றிகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது ஆலங்குப்பன் பகுதியில் தேசிய நெடுஞ் சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் பன்றிகள் மீது மோதி விட்டு சென்றது. இதில் 4 பன்றிகள் சம்பவயிட த்தில் உயிரிழந்துள்ளது இதை குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News